Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் குழந்தைகள் ஆபாசப்படம் பகிர்ந்த நபர் கைது

டிசம்பர் 12, 2019 05:45

திருச்சி: குழந்தைகள் ஆபாசப்படம் பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்ப்பட்டுள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் பகிர்வோர், எடுப்போர், பார்ப்போர் என 3000க்கும் மேற்பட்டோர் பட்டியல் தயாராகி உள்ளது என்று ஏடிஜிபி ரவி முன்பே எச்சரித்திருந்தார். 

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏடிஜிபி ரவியின் இந்த நடவடிக்கை சமூகத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றது. அதே சமயம் கடுமையான விவாதத்துக்கும் உள்ளானது. 

இந்நிலையில், குழந்தைகள் ஆபாசப்படத்தை பகிர்ந்ததற்காக கிறிஸ்ட்டோபர் அல்போன்ஸ் என்பவர் திருச்சி மாவட்டம் பாலக்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

நிலவன் ஆதவன் எனும் பொய்கணக்கு மூலமாக குழந்தைகள் ஆபாசப்படத்தை இவர் இணையதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் பிரிவினர் இதனைக் கண்டுபிடித்துள்ளானர்.கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்